search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார், கல்லாவி சாலையில் உள்ள சுப்பிரமணி நகர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கல்லாவி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 52) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×