search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி தற்கொலை
    X
    தொழிலாளி தற்கொலை

    பள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    பள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அருகே ஆயக்காட்டூர் பள்ளம் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மரத்தில் தொங்கிய பிணத்தை கீழே இறக்கினர். விசாரணையில் இறந்தவர் பழனிதுரை (வயது 44) என்றும், அவர் அப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து பழனிசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×