search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

    கமுதி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கமுதி:

    கமுதி அருகே கீழராமநதியை சேர்ந்தவர் மூக்கையா (வயது 37). இவர் கமுதியில் இருந்து கீழராமநதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே கிளாமரத்தை சேர்ந்த பாலமுருகன் (31) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ நேருக்குநேர் மோதியது. இதில் படுகாயமடைந்த மூக்கையா கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதேபோல கமுதி அருகே கணக்கியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகள் ரூபா. அகரத்துப்பட்டியை சேர்ந்த முருகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி படுகாயமடைந்தனர். இதில் ரூபா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×