என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடிப்பட்டி அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்24 May 2020 12:53 PM GMT (Updated: 24 May 2020 12:53 PM GMT)
வாடிப்பட்டி அருகே மணல் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம் பகுதி தான் மாவட்ட எல்லையாக உள்ளது. எனவே இங்கு போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கின்றனர். இங்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இருந்து மதுரைக்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் கிராவல் மண் எடுத்து வருவதற்கான அரசின் அனுமதி சீட்டை வைத்து ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் குலசேகரன்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த லாரியிலும் அதே போல கிராவல் மண் நடைச்சீட்டு ரசீதை வைத்து ஆற்று மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X