search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை - கோப்புப்படம்
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை - கோப்புப்படம்

    மேலும் 131 பேருக்கு பாதிப்பு - ராயபுரம் மண்டலத்தில் நோய் தொற்று 2 ஆயிரத்தை நெருங்கியது

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில்தான் அதிக பாதிப்பு உள்ளது. இன்றைய நிலவரப்படி அந்த மண்டலத்தில் நோய் தொற்று 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
    சென்னை:

    சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை, 9,989 ஆக அதிகரித்துள்ளது. நாளை பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிவிடும்.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில்தான் அதிக பாதிப்பு உள்ளது. இன்றைய நிலவரப்படி அந்த மண்டலத்தில் நோய் தொற்று 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    அப்பகுதியில் மட்டும் 1,889 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ராயபுரம் மண்டலத்தில் நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1,768 ஆக இருந்தது. ஒரே நாளில் 131 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கம் மண்டலம் உள்ளது. இங்கு 1,391 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதேபோல் திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1,133 பேரும், தேனாம்பேட்டையில் 1,054 பேரும்கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் சென்னையில் உள்ள மண்டலங்களில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திரு.வி.நகர் ஆகிய 4 மண்டலங்களில் நோய் பாதிப்பு 1000-த்தை தாண்டி இருக்கிறது.

    இதேபோல் அம்பத்தூர் மண்டலத்தில் 829 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 974 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 2 மண்டலங்களிலும் வரும் நாளில் நோய் பாதிப்பு ஆயிரத்தை தாண்டிவிடும்.

    மற்ற மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    திருவொற்றியூர்-274, மணலி-126, மாதவரம்-213, அம்பத்தூர்-415, வளசரவாக்கம்-679, ஆலந்தூர்-107, அடையாறு-533, பெருங்குடி- 152, சோழிங்கநல்லூர்-160.
    Next Story
    ×