என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி மாவட்ட சிறையில் அனைத்து கைதிகளுக்கும் கொரோனா தொற்று சோதனை
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 263 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 100 பேர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 163 பேர் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை திடீர் நகரைச் சேர்ந்த 4 பேரை அடிதடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் தேனி மாவட்ட சிறைக்கு கொண்டு வரப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரில் ஒருவரான 18 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மற்ற 3 பேருக்கும் நோய் தொற்று இல்லை என பரிசோதனையில் தெரிய வந்தது.
இதனையடுத்து நோய் தொற்று உறுதியான வாலிபர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் மற்ற கைதிகளுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதா? என அறிய மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் சிறைச்சாலை முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்