என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சலூன் கடைகள் திறப்பு - கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வினியோகம்
Byமாலை மலர்24 May 2020 9:23 AM GMT (Updated: 24 May 2020 9:23 AM GMT)
சலூன் கடைகளில் கூட்டம் சேருவதை தவிர்க்க திண்டுக்கல்லில் உள்ள சில கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் இன்று திறக்கப்பட்டது.
கொரோனா ஊடரங்கு காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து மற்றும் வணிக வளாகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க தடை தொடர்ந்தது. சலூன் கடை உரிமையாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து சென்னை நீங்கலாக அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இன்று அனைத்து சலூன் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் திரண்டனர்.
கடைகளில் பணிபுரிவோர் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும் என்றும் கடை முழுவதும் கிருமிநாசினி கொண்டு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சானிடைசர் கொண்டு கை கழுவி அதன் பின்னரே சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர். கடைகளில் கூட்டம் சேருவதை தவிர்க்க திண்டுக்கல்லில் உள்ள சில கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்தில் போன் செய்து விட்டு பின்னர் கடைக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது.2 மாதங்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் இன்று திறக்கப்பட்டது.
கொரோனா ஊடரங்கு காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து மற்றும் வணிக வளாகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க தடை தொடர்ந்தது. சலூன் கடை உரிமையாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து சென்னை நீங்கலாக அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இன்று அனைத்து சலூன் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் திரண்டனர்.
கடைகளில் பணிபுரிவோர் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும் என்றும் கடை முழுவதும் கிருமிநாசினி கொண்டு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சானிடைசர் கொண்டு கை கழுவி அதன் பின்னரே சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர். கடைகளில் கூட்டம் சேருவதை தவிர்க்க திண்டுக்கல்லில் உள்ள சில கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்தில் போன் செய்து விட்டு பின்னர் கடைக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது.2 மாதங்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X