search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சலூன் கடை
    X
    சலூன் கடை

    சலூன் கடைகள் திறப்பு - கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வினியோகம்

    சலூன் கடைகளில் கூட்டம் சேருவதை தவிர்க்க திண்டுக்கல்லில் உள்ள சில கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் இன்று திறக்கப்பட்டது.

    கொரோனா ஊடரங்கு காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து மற்றும் வணிக வளாகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க தடை தொடர்ந்தது. சலூன் கடை உரிமையாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து சென்னை நீங்கலாக அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இன்று அனைத்து சலூன் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் திரண்டனர்.

    கடைகளில் பணிபுரிவோர் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும் என்றும் கடை முழுவதும் கிருமிநாசினி கொண்டு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சானிடைசர் கொண்டு கை கழுவி அதன் பின்னரே சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர். கடைகளில் கூட்டம் சேருவதை தவிர்க்க திண்டுக்கல்லில் உள்ள சில கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டது.

    குறிப்பிட்ட நேரத்தில் போன் செய்து விட்டு பின்னர் கடைக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது.2 மாதங்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×