search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாடு
    X
    குடிநீர் தட்டுப்பாடு

    கும்பகோணத்தில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    கும்பகோணம் நகராட்சி பகுதியில் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் நகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வலையப்பேட்டை நீரேற்று நிலையத்தில் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக நகரத்தில் உள்ள 45 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு 26-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், சேமித்து வைத்தும் பயன்படுத்தி நகராட்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×