என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செங்கோடு அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்23 May 2020 2:20 PM GMT (Updated: 23 May 2020 2:20 PM GMT)
திருச்செங்கோடு அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நாமக்கல் சாலை நாடார் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டு அருகே அக்காள் மகன் பாரத் என்பவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியான கோவிந்தசாமி (48), இவருடைய மகன்கள் மயில்சாமி (25), இளங்கோவன் (24) ஆகியோர் முன்விரோதம் காரணமாக பிரபாகரனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கட்டையால் அவரை தாக்கினர். இந்த தகராறில் பாரத்தும் தாக்கப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக பிரபாகரன் கொடுத்த புகாரின்பேரில், திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோவிந்தசாமி, மயில்சாமி, இளங்கோவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X