என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
Byமாலை மலர்23 May 2020 1:50 PM GMT (Updated: 23 May 2020 1:50 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சிடுவம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் கிருஷ்ணகிரியில் மேல் சோமார்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கும், திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்தது. இதையறிந்த பெற்றோர் கார்த்திக்கை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே உள்ள நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் என்கிற அசோக்குமார் (23). பொக்லைன் டிரைவர். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக லோகநாதன் போச்சம்பள்ளி பழனியாண்டவர் கோவில் அருகில் உள்ள ஒரு நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளி அருகே உள்ள கல்லுப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சிடுவம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் கிருஷ்ணகிரியில் மேல் சோமார்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கும், திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்தது. இதையறிந்த பெற்றோர் கார்த்திக்கை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே உள்ள நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் என்கிற அசோக்குமார் (23). பொக்லைன் டிரைவர். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக லோகநாதன் போச்சம்பள்ளி பழனியாண்டவர் கோவில் அருகில் உள்ள ஒரு நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளி அருகே உள்ள கல்லுப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X