search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வையம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: 2 பேர் பலி

    வையம்பட்டி அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வையம்பட்டி:

    திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த என்.பூலாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (வயது 52), மரியராஜ் (60). இருவரும் நேற்று மதியம் என்.பூலாம்பட்டியில் இருந்து மொபட்டில் தவளவீரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே தவளவீரன்பட்டியில் இருந்து டேவிட்ஜேம்ஸ் (38) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் மொபட்டும்
    நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மரியராஜ் மற்றும் டேவிட் ஜேம்சை அருகில் உள்ளவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரியராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். டேவிட் ஜேம்ஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×