search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல் அருகே அரசு பஸ் கண்டக்டரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் அரசு பஸ் கண்டக்டரை அரிவாளால் வெட்டிய மகன்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள தேவ அழகர்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் நாகராஜ் (வயது 42). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வி (38) என்ற மனைவியும், கார்த்திக் (22), மோகன்ராஜ் (19) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    கருத்துவேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 2 மகன்களுடன் செல்வி வசித்து வந்தார். நேற்று கணவர் வீட்டுக்கு சென்ற செல்வி மற்றும் அவரது மகன்கள் பணம் கேட்டு தகராறு செய்தனர்.

    நாகராஜ் பணம் தர மறுக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வி மற்றும் அவரது மகன்கள் அரிவாளால் நாகராஜை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க வந்த அவரது தந்தை பெருமாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேரை வெட்டிய செல்வி மற்றும் அவரது மகன்களை கைது செய்தனர்.
    Next Story
    ×