என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே விவசாயி அடித்து கொலை
Byமாலை மலர்23 May 2020 9:14 AM GMT (Updated: 23 May 2020 9:14 AM GMT)
விழுப்புரம் அருகே பயங்கரம் மணல் அள்ளும் தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் முதலியார் குப்பத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 57). விவசாயி. இவரது உறவினர் நாகராஜ் (45). இவர்களது விவசாய நிலம் அருகருகே உள்ளது.
கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் வாய்கால் வரப்பு சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு இருந்தது. சம்பவத்தன்று சுந்தர்ராஜ் நிலத்தின் அருகே உள்ள ஓடையில் நாகராஜின் மகன் தமிழ்மாறன் மணல் அள்ளினார். இதை பார்த்த சுந்தர்ராஜின் மகன் சிவக்குமார் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாகராஜ் அவரது மகன்கள் தமிழ்மாறன், முத்தமிழ் பிரதாப் ஆகியோர் சேர்ந்து சுந்தர் ராஜ், அவரது மகன் சிவக்குமார் ஆகியோரை தாக்கினர். இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
மோதலில் காயம் அடைந்த சுந்தர்ராஜ், நாகராஜ் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சுந்தர்ராஜ் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சுந்தர்ராஜ் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிந்து முத்தமிழ், பிரதாப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகராஜ், தமிழ் மாறன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் முதலியார் குப்பத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 57). விவசாயி. இவரது உறவினர் நாகராஜ் (45). இவர்களது விவசாய நிலம் அருகருகே உள்ளது.
கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் வாய்கால் வரப்பு சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு இருந்தது. சம்பவத்தன்று சுந்தர்ராஜ் நிலத்தின் அருகே உள்ள ஓடையில் நாகராஜின் மகன் தமிழ்மாறன் மணல் அள்ளினார். இதை பார்த்த சுந்தர்ராஜின் மகன் சிவக்குமார் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாகராஜ் அவரது மகன்கள் தமிழ்மாறன், முத்தமிழ் பிரதாப் ஆகியோர் சேர்ந்து சுந்தர் ராஜ், அவரது மகன் சிவக்குமார் ஆகியோரை தாக்கினர். இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
மோதலில் காயம் அடைந்த சுந்தர்ராஜ், நாகராஜ் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சுந்தர்ராஜ் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சுந்தர்ராஜ் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிந்து முத்தமிழ், பிரதாப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகராஜ், தமிழ் மாறன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X