என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னமனூர் அருகே கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி
Byமாலை மலர்23 May 2020 8:46 AM GMT (Updated: 23 May 2020 8:46 AM GMT)
சின்னமனூர் அருகே மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதியதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள கீழபூலானந்தபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி முருகேஸ்வரி (வயது45) மற்றும் காளிமுத்து மகள் நாகலட்சுமி (35). இவர்கள் 2 பேரும் கட்டிட வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு வேலையை முடித்து விட்டு கீழபூலானந்தபுரம் நோக்கி குமுளி-தேனி சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது சின்னமனூரில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் இவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்தும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் விபத்தை ஏற்படுத்திய கார் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த கார் எண்ணை வைத்து டிரைவர் சின்னமனூரை சேர்ந்த செந்தட்டிகாளை (29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X