search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சின்னமனூர் அருகே கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி

    சின்னமனூர் அருகே மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதியதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள கீழபூலானந்தபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி முருகேஸ்வரி (வயது45) மற்றும் காளிமுத்து மகள் நாகலட்சுமி (35). இவர்கள் 2 பேரும் கட்டிட வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு வேலையை முடித்து விட்டு கீழபூலானந்தபுரம் நோக்கி குமுளி-தேனி சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது சின்னமனூரில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் இவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்தும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் விபத்தை ஏற்படுத்திய கார் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த கார் எண்ணை வைத்து டிரைவர் சின்னமனூரை சேர்ந்த செந்தட்டிகாளை (29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×