search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    மேற்கு திசை தரைக் காற்று தொடர்ந்து வீசக்கூடிய நிலையில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அளவு 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகக்  கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×