என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தியவர் கைது
Byமாலை மலர்23 May 2020 6:35 AM GMT (Updated: 23 May 2020 6:35 AM GMT)
திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டி உள்ள சாமிரெட்டிகண்டிகை அருகே நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இலங்கை தமிழர் அகதிகள் முகாம் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் சூளுர்பேட்டையில் இருந்து 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த மாதர்பாக்கம் அடுத்த ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X