search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்எஸ் பாரதி
    X
    ஆர்எஸ் பாரதி

    சீப்பை மறைத்து விட்டால் கல்யாணம் நிற்காது- ஆர்எஸ் பாரதி

    யாரையோ திருப்திப்படுத்த தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    கைது செய்யப்பட்டது குறித்து ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிப்.15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது; கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார். 
    Next Story
    ×