search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    களக்காட்டில் வீட்டில் விபசாரம்- 3 பேர் கைது

    களக்காட்டில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு ஞானசம்பந்தபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை மீட்ட போலீசார், அவர்களுடன் உல்லாசமாக இருந்த நெல்லை அருகே உள்ள மேலகுளத்தை சேர்ந்த 3 மணிராஜ் (32), குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த சேவியர் (34), ராஜசுதர்லின் (31) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், கீழதேவநல்லூரை சேர்ந்த லட்சுமி என்பவர் வீட்டு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள லட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×