search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கபிஸ்தலத்தில் மதுபோதையில் இருதரப்பினர் மோதல்- வாலிபர் கைது

    கபிஸ்தலத்தில் மதுபோதையில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.
    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே மேல கபிஸ்தலம் ஆதிதிராவிடர் தெருவில் வசிப்பவர் குமார் (வயது 45) இவருக்கும், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிக்கும் தர்மன், முருகேந்திரன், ஆகியோருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.

    இதில் தர்மன் மற்றும் முருகேந்திரன் ஆகிய இருவரும் குமாரை உருட்டுக்கட்டை மட்டும் கடப்பாறையால் தாக்கியதில் குமார் படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து குமார் மற்றும் அவரது உறவினர்கள் சாமி, ராமராஜன், மற்றும் சிலர் சேர்ந்து தர்மன் மற்றும் முருகேந்திரன் ஆகியோரை தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி, மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிஸ்தலம் காமராஜர் காலனி முருகையன் மகன் ராமராஜன் (31) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு தரப்பையும் சேர்ந்த 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×