என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலத்தில் மதுபோதையில் இருதரப்பினர் மோதல்- வாலிபர் கைது
Byமாலை மலர்22 May 2020 9:40 AM GMT (Updated: 22 May 2020 9:40 AM GMT)
கபிஸ்தலத்தில் மதுபோதையில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே மேல கபிஸ்தலம் ஆதிதிராவிடர் தெருவில் வசிப்பவர் குமார் (வயது 45) இவருக்கும், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிக்கும் தர்மன், முருகேந்திரன், ஆகியோருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.
இதில் தர்மன் மற்றும் முருகேந்திரன் ஆகிய இருவரும் குமாரை உருட்டுக்கட்டை மட்டும் கடப்பாறையால் தாக்கியதில் குமார் படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து குமார் மற்றும் அவரது உறவினர்கள் சாமி, ராமராஜன், மற்றும் சிலர் சேர்ந்து தர்மன் மற்றும் முருகேந்திரன் ஆகியோரை தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி, மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிஸ்தலம் காமராஜர் காலனி முருகையன் மகன் ராமராஜன் (31) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு தரப்பையும் சேர்ந்த 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கபிஸ்தலம் அருகே மேல கபிஸ்தலம் ஆதிதிராவிடர் தெருவில் வசிப்பவர் குமார் (வயது 45) இவருக்கும், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிக்கும் தர்மன், முருகேந்திரன், ஆகியோருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.
இதில் தர்மன் மற்றும் முருகேந்திரன் ஆகிய இருவரும் குமாரை உருட்டுக்கட்டை மட்டும் கடப்பாறையால் தாக்கியதில் குமார் படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து குமார் மற்றும் அவரது உறவினர்கள் சாமி, ராமராஜன், மற்றும் சிலர் சேர்ந்து தர்மன் மற்றும் முருகேந்திரன் ஆகியோரை தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி, மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிஸ்தலம் காமராஜர் காலனி முருகையன் மகன் ராமராஜன் (31) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு தரப்பையும் சேர்ந்த 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X