search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குடிகார கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண் பலி

    திண்டிவனம் அருகே குடிகார கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே ரோசணை வடஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 33). இவரது மனைவி பானுபிரியா (27). முரளிக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று முரளி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து பானுப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த பானுபிரியா, கணவனை பயமுறுத்த வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீ வைப்பது போல் நாடகமாடினார்.

    அப்போது தீப்பிடித்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    Next Story
    ×