search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    விருதுநகரில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தீக்குளித்து தற்கொலை

    எஸ்.எஸ்.எல்.சி. மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் கூரைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. பெயிண்டராக உள்ள இவரின் 2-வது மகள் முத்துலட்சுமி (வயது 15). விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். பொதுத்தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை தந்தை வேலுச்சாமியும், தாயார் மாரியம்மாளும் வெளியே சென்றனர். அப்போது முத்துலட்சுமி வீட்டின்பின்புறம் சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் மாணவி முத்துலட்சுமியை காப்பாற்ற முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது. அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முத்துலட்சுமியின் தயார் கொடுத்த புகாரின்பேரில், சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். படிப்பில் சிறந்த மாணவியான முத்துலட்சுமி இக்கட்டான சூழ்நிலையில் தேர்வெழுத முடியுமா என்ற மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    Next Story
    ×