search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    திருவண்ணாமலையில் காண்டிராக்டர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

    திருவண்ணாமலையில் காண்டிராக்டர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆணாய்ப் பிறந்தான் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 48), காண்டிராக்டர். இவர், தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் அவர் திருவண்ணாமலையில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் 2 செல்போன்கள், எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×