என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு மளிகை பொருட்கள்
Byமாலை மலர்20 May 2020 11:19 AM GMT (Updated: 20 May 2020 11:19 AM GMT)
நாமக்கல்லில் கொரோனா சிகிச்சை பிரிவுக்கான 108 ஆம்புலன்சுகளில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல்லில் கொரோனா சிகிச்சை பிரிவுக்கான 108 ஆம்புலன்சுகளில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை உள்ளடக்கிய மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ் குமார் வழங்கினார். இதில் நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் நித்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் இளம்பரிதி செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X