என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்20 May 2020 10:18 AM GMT (Updated: 20 May 2020 10:18 AM GMT)
பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கலூர்:
திருப்பூர் சேர்ந்தவர் சங்கிலி முருகன் (வயது45). இவர் பொங்கலூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்துசென்று சங்கிலி முருகனை தேடினார்கள். அப்போது இறந்த நிலையில் சங்கிலி முருகன் உடல், அவர் குளித்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X