search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

    பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொங்கலூர்:

    திருப்பூர் சேர்ந்தவர் சங்கிலி முருகன் (வயது45). இவர் பொங்கலூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்துசென்று சங்கிலி முருகனை தேடினார்கள். அப்போது இறந்த நிலையில் சங்கிலி முருகன் உடல், அவர் குளித்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×