என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே மொபட் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்19 May 2020 11:11 AM GMT (Updated: 19 May 2020 11:11 AM GMT)
பெரம்பலூர் அருகே மொபட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அண்ணாநகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் தமிழ்ச்செல்வன்(வயது 31). இவர் பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் நேற்று மதியம் தனது மொபட்டில் ஓட்டலுக்கு வந்தார்.
பின்னர் மொபட்டை ஓட்டலுக்கு முன்பு நிறுத்தி விட்டு, உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து தமிழ்ச்செல்வன் பார்த்தபோது மர்மநபர் ஒருவர் மொபட்டை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர், அவ்வழியாக சென்றவர்களின் உதவியுடன் விரட்டி சென்று, அந்த மர்மநபரை கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்த நபரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மொபட்டை திருடிய நபர் வடக்கு மாதவி சமத்துவபுரத்தை காந்திநகரை சேர்ந்த அந்தோணி மகன் தேவராஜ்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்த மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X