search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    மரத்தில் கார் மோதி பாய்லர் ஆலை ஊழியர் பலி

    திருச்சி அருகே மரத்தில் கார் மோதி பாய்லர் ஆலை ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் கைலாசபுரத்தை சேர்ந்தவர் கிருபாகரன்(வயது 36). பாய்லர் ஆலை ஊழியரான இவர் தனது நண்பர்கள் செல்வம்(34), கோவிந்த் கிஷோர்(32) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை திருச்சி-புதுக்கோட்டை மெயின் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார்.

    அண்ணா கோளரங்கம் அருகே கார் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. பின்னர் சாலையின் தடுப்பு கட்டையில் மோதிவிட்டு நிற்காமல் மீண்டும் மற்றொரு மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த கிருபாகரன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிருபாகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×