search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல் கைது

    திருப்பூர் மாநகரில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்ட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் தாராபுரம் ரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் செட்டி பாளையத்தை சேர்ந்த கபிலரசன் (26), மகாராஜா (25), குணா (22), ஈஸ்வரன் (24) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து திருப்பூர் மாநகரில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து 4 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×