என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல் கைது
திருப்பூர்:
திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் தாராபுரம் ரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் செட்டி பாளையத்தை சேர்ந்த கபிலரசன் (26), மகாராஜா (25), குணா (22), ஈஸ்வரன் (24) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து திருப்பூர் மாநகரில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து 4 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்