search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உசிலம்பட்டியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

    உசிலம்பட்டியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய நெல்லை வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் யு.வாடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தியதில் 1.250 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சிவரஞ்சித் (வயது 24), சிமியோன் (23) ஆகிய 2 பேரும் கஞ்சா வாங்கிவிட்டு நெல்லைக்கு செல்லும் வழியில் சிக்கியது தெரியவந்தது.

    கைதான சிவரஞ்சித் நெல்லை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×