என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உசிலம்பட்டியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் யு.வாடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தியதில் 1.250 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சிவரஞ்சித் (வயது 24), சிமியோன் (23) ஆகிய 2 பேரும் கஞ்சா வாங்கிவிட்டு நெல்லைக்கு செல்லும் வழியில் சிக்கியது தெரியவந்தது.
கைதான சிவரஞ்சித் நெல்லை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்