search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மளிகை கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

    திருப்பூர் அருகே கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பழனி(வயது 45). மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

    நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×