என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே போலீஸ்காரர்களை மிரட்டிய 2 பேர் கைது
Byமாலை மலர்19 May 2020 7:01 AM GMT (Updated: 19 May 2020 7:01 AM GMT)
திருவள்ளூர் அருகே போலீஸ்காரர்களை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக இருப்பவர் வேலாயுதம். 2-ம் நிலை காவலராக தமிழரசன் உள்ளார். அவர்கள் நேற்றுமுன்தினம் திருவள்ளூரை அடுத்த திருமழிசை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திருமழிசை பஜார் பகுதியில், திருமழிசை வி.ஓ.சி. தெருவை சேர்ந்த விஷ்வா (வயது 21), மேல்மணம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த நவீன்ராஜ் (வயது 31) ஆகியோர் பஜாரில் நின்று கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் மேற்கண்ட போலீஸ்காரர் 2 பேரையும் தாக்க முயன்று அவர்களை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்வா மற்றும் நவீன்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X