search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வெளிமாநிலத்தில் இருந்து வந்த 2 பேர் திருவாடானையில் தனிமைப்படுத்தப்பட்டனர்

    அரியானா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து திருவாடானையை சுற்றியுள்ள சொந்த ஊர்களுக்கு 2 பேர் வந்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சுகாதார பணியாளர்கள், இவர்கள் இருவரையும் அரசு கல்லூரி தனிமைவார்டில் அனுமதித்துள்ளனர்.
    தொண்டி:

    திருவாடானை அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமை வார்டில் வெளிமாவட்டத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த திருவாடானை தாலுகாவை சேர்ந்த 36 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் உரிய பரிசோதனைகளுக்கு பின் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அரியானா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து திருவாடானையை சுற்றியுள்ள சொந்த ஊர்களுக்கு 2 பேர் வந்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சுகாதார பணியாளர்கள், இவர்கள் இருவரையும் அரசு கல்லூரி தனிமைவார்டில் அனுமதித்துள்ளனர். இதேபோல உப்பூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்த பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களை சேர்ந்த 55 பேர் தொண்டியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் உரிய அனுமதி சீட்டு பெறப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருவாடானை தாசில்தார் மாதவன் தெரிவித்தார்.
    Next Story
    ×