என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூர் அருகே சிறுவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்18 May 2020 9:54 AM GMT (Updated: 18 May 2020 9:54 AM GMT)
சூலூர் அருகே சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி எடுத்து வர மறுத்த சிறுவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சூலூர்:
சூலூர் அடுத்துள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு 15 வயதில் மகன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரம் பஜனைவீதியில் வசித்து வரும் மணிகண்டன்(43) என்பவர் வீட்டிற்கு வந்தார். நேற்று மதியம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன், சிறுவனிடம் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி எடுத்து வருமாறு கூறினார். ஆனால் அவர் எடுத்து வர மறுத்து அங்கேயே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனை வயிற்றில் குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X