என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே இன்சூரன்ஸ் ஏஜெண்டை எரித்துக் கொன்றது யார்? போலீசார் விசாரணை
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டப்புளிநகர் தனியார் பஞ்சு ஆலையின் பின்புறம் கண்மாய்கரைக்கு செல்லும் சாலையின் அருகில் நேற்று காலை சுமார் 52 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கழுத்து அறுக்கப்பட்டு தலையில் கல்லால் தாக்கப்பட்டும் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் கிடந்தது.
அந்த நபர் கருப்பு நிற பேண்டும், ரோஸ் கலரில் கட்டம் போட்ட சட்டையும் பனியனும் அணிந்து இருந்தார்.
தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது பிணத்தின் பையில் இருந்த விசிட்டிங் கார்டில் சிவக் குமார் தனியார் இன்சூரன்ஸ் ஏஜெண்டு, எஸ்.எஸ்.காலனி, மதுரை என்ற முகவரியிருந்தது.
அதை வைத்து விசாரணை செய்தபோது எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக இருப்பது சிவக்குமார் தான் என்றும் அவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 வயது குழந்தையும், இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.
சிவக்குமாரை கொலை செய்தது யார்? முன் விரோதம் காரணமா? தொழில் போட்டியா? கள்ளகாதல் விவகாரமா? போதையால் நடந்த கொலையா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வரு கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்