search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரை அருகே கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

    மதுரை அருகே கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கீழசந்தை பேட்டை பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம்(வயது 24). இவர் பழங்காநத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அந்த வாலிபர் இப்ராகிம் வைத்திருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பிவிட்டார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரராஜபுரத்தை சேர்ந்த முத்தையா(25) என்பவரை கைது செய்தனர்.

    அதே போன்று செல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை 2 பேர் வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பறித்தனர். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசூர்யா, முத்துப்பாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×