என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பன் புயல் எதிரொலி- மீனவர் பலி
Byமாலை மலர்18 May 2020 7:10 AM GMT (Updated: 18 May 2020 7:10 AM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்பன் புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. கடற்கரையில் சேதமடைந்த படகை மீட்கச்சென்ற மீனவர் தவறி கீழே விழுந்து பலியானார்.
ராமநாதபுரம்:
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த உம்பன் புயல் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று அதிதீவிர புயலாக இருந்த உம்பன் இன்று அதி உச்ச உயர் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமாகி வருகிற 20-ந் தேதி மேற்கு வங்கம் - வங்காளதேசம் இடையே கரையை கடக்கிறது.
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒன்றோடு ஒன்று மோதின. இதில் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் சேதம் அடைந்தன. படகை மீட்கச் சென்ற தங்கமுனி என்ற மீனவர் தவறி கீழே விழுந்து பலியானார்.
புயல் காரணமாக சென்னை, கடலூர், புதுவை, நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த உம்பன் புயல் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று அதிதீவிர புயலாக இருந்த உம்பன் இன்று அதி உச்ச உயர் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமாகி வருகிற 20-ந் தேதி மேற்கு வங்கம் - வங்காளதேசம் இடையே கரையை கடக்கிறது.
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒன்றோடு ஒன்று மோதின. இதில் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் சேதம் அடைந்தன. படகை மீட்கச் சென்ற தங்கமுனி என்ற மீனவர் தவறி கீழே விழுந்து பலியானார்.
புயல் காரணமாக சென்னை, கடலூர், புதுவை, நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X