என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடற்பயிற்சி, முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க முன்னுரிமை- சரத்குமார் வேண்டுகோள்
Byமாலை மலர்18 May 2020 5:07 AM GMT (Updated: 18 May 2020 5:07 AM GMT)
உடற்பயிற்சி, முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்பவர்கள் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள். சுழற்சி முறையில், சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து பயிற்சி செய்ய அனுமதித்தால் நோய் தொற்று பரவும் சூழல் ஏற்படாது. அதேபோல், முடிதிருத்தும் தொழில் செய்பவர்கள் வருவாயின்றி வறுமையில் தவிப்பதால் கடையின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் கடையை திறக்க அனுமதித்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்.
எனவே, தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறையுடன் முன்னுரிமை தந்து, உடற்பயிற்சி நிலையங்களை திறப்பதற்கு அனுமதியளிக்க பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X