search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பூதப்பாண்டி அருகே மகன் மீதான தாக்குதலை தடுத்த பெண் கொலை

    பூதப்பாண்டி அருகே மகன் மீதான தாக்குதலை தடுத்த பெண் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் உறவினர்கள் 3 பேரை போலீசா கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே உள்ள எட்டாமடை மேல பிலவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வனஜா (வயது 60). இவரது மகள் வின்சி (31).

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வின்சி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். அப்போது வின்சியுடன் மகனும், தந்தையுடன் மகளும் சென்றனர்.

    இந்தநிலையில் பாட்டி வனஜாவை பார்த்து வருவதாக கூறி விட்டு மதனின் மகள் அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் வனஜா வீட்டில் இருந்து அவர் திரும்பி வரவில்லை. வனஜா வீட்டிலேயே இருந்து கொண்டார்.

    இதனால் மதன், மகளை தேடி வனஜா வீட்டுக்கு சென்றார். மகளை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி வனஜாவை அவர் கண்டித்தார். அப்போது வனஜாவின் மகன் வினு வீட்டில் இருந்தார். அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மதனை சரமாரியாக தாக்கினார். காயம் அடைந்த மதன் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து அறிந்த மதனின் உறவினர்கள் சுதன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் வனஜா வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரது மகன் வினுவை தாக்கினர். அதை தடுக்க வனஜா வந்தார். அப்போது அவருக்கும் அடி- உதை விழுந்தது. இதில் வனஜா சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வனஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வனஜா கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுதன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×