search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    நெல்லை மாவட்டத்தில் 6,319 பேர் மீது வழக்கு

    நெல்லை மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி காரணம் இன்றி வெளியே சுற்றித்திரிந்த 6,319 பேர் மீது 4,270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதை மீறி வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி காரணம் இன்றி வெளியே சுற்றித்திரிந்த 6,319 பேர் மீது 4,270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து 4,260 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×