என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே காரில் ஆடுகளை திருடிச் சென்ற 3 பேர் கைது
Byமாலை மலர்17 May 2020 1:42 PM GMT (Updated: 17 May 2020 1:42 PM GMT)
பொன்னேரி அருகே காரில் ஆடுகளை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் வசிப்பவர் அப்துல்முஜிப் (வயது 30). இவர் தனக்கு சொந்தமான 10 ஆடுகளை பழவேற்காடு ஏரியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆடுகளை பிடித்து காருக்குள் ஏற்ற முயன்றனர்.
இதை பொன்னேரி பழவேற்காடு சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கண்டதும், சத்தம் போடவே அகப்பட்ட 2 ஆடுகளையும் காரில் ஏற்றி வேகமாக தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் அந்த வழியாக வந்த காரை மடக்கி அதில் இருந்த திருமழிசையை சேர்ந்த அஸ்ரத் வயது (34), அஜய் (22), அஜித்குமார் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், 2 ஆடுகள் மற்றும் காரையும் பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X