என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுக்கடைகளில் கண்ட ருசிகர காட்சிகள்
Byமாலை மலர்17 May 2020 3:01 AM GMT (Updated: 17 May 2020 3:01 AM GMT)
மதுக்கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதினாலும், சில ருசிகர காட்சிகள் அரங்கேறியதையும் பார்க்க முடிந்தது.
* மதுபாட்டில் வாங்குவதற்காக ஏராளமானோர் சாக்கு பை, துண்டு, துணி பை முதலியவற்றை எடுத்து வந்ததை பார்க்க முடிந்தது. இன்னும் சிலர் தாங்கள் உடுத்தியிருந்த கைலிகள் மற்றும் ஹெல்மெட்டில் அடுக்கி வைத்து மது பாட்டில்களை கொண்டு சென்றனர்.
* ஊத்துக்காடு அருகே உள்ள மதுக்கடை ஒன்றில் மதுபிரியர்கள் குடை பிடித்தபடி சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
* மதுக்கடைகளில் டோக்கன் வாங்குவதற்காக தள்ளாடும் வயதிலும் ஓட்டப்பந்தய வீரரைப் போல உற்சாகத்தில் ஓடும் முதியவர்களை பார்க்க முடிந்தது.
* மதுராந்தகம் அருகே கீழ் மருவத்தூரில் உள்ள ‘டாஸ்மாக்’ கடை முன்பு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்திருந்தனர்.
* தற்போது மூட்டை முடிச்சுகளுடன் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வது போல, கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கிக்கொண்டு மதுக்கடைகள் முன்பு வரிசையில் காத்திருந்தவர்களை பார்க்க முடிந்தது.
* பச்சிளம் குழந்தையை மார்போடு அணைத்து அன்பு செலுத்தும் தாயைப்போல, மதுபாட்டில்களை நெஞ்சோடு சுமந்து அக்கறையுடன் மதுபிரியர்கள் கொண்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X