என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிபாளையம் பகுதியில் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்16 May 2020 2:09 PM GMT (Updated: 16 May 2020 2:09 PM GMT)
பள்ளிபாளையம் பகுதியில் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் போலீசார் நேற்று மதியம் 2 மணியளவில் எஸ்.பி.பி. காலனி பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றபோது, கீழே விழுந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த கருப்புசாமி (வயது 27), பள்ளிபாளையம் ஒட்டமெத்தையை சேர்ந்த மகேஷ் (25), உதயகுமார் (24) என்பதும், அவர்கள் கடந்த 4 மாதங்களாக எஸ்.பி.பி. அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டில் 1 பவுன், ரூ.5 ஆயிரம், தாஜ்நகரில் ஒரு ஆசிரியர் வீட்டில் 4 பவுன், அக்ரஹாரம் பகுதியில் சையத் காசீம் (50) என்பவரது வீட்டில் 5 பவுன் நகைகளை திருடியதும், தற்போது தாஜ்நகரில் திருட நோட்டம் போட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் அவர்களை திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X