என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பாளை திமுக எம்எல்ஏ மகன் மரணம்
Byமாலை மலர்15 May 2020 2:36 PM GMT (Updated: 15 May 2020 2:36 PM GMT)
சென்னை மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பாளை தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் மரணம் அடைந்தார்.
நெல்லை:
தி.மு.க.வை சேர்ந்த பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம். மைதீன்கான். இவரது மகன் காஜா பீர்மைதீன் (வயது 55). இவர் சென்னை மயிலாப்பூரில் தங்கியிருந்து வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை முடிவு வரவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் திடீரென மரணமடைந்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் சென்றனர். மற்ற யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X