search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்டம்
    X
    சேலம் மாவட்டம்

    கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது சேலம்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளதால் தொற்று இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது.
    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,637 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து சேலம் மாவட்டம் முழுவதுமாக மீண்டுள்ளது.

    சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 35 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தொற்று இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி சேலத்தில் முதல் கொரோனா தொற்று உறுதியானது.
    Next Story
    ×