என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக வலுப்பெறும் - தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
Byமாலை மலர்14 May 2020 2:18 AM GMT (Updated: 14 May 2020 2:18 AM GMT)
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தற்போது கோடைமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்கிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும் (வியாழக்கிழமை) மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுதவிர தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளது. இது வரும் 15-ந்தேதி(நாளை) மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். அதன்பின்னர், 16-ந்தேதி (நாளை மறுதினம்) புயலாக வலுபெறக்கூடும்
இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வேகத்திலும், நாளை மறுதினம் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், 17-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) 65 கி.மீ. முதல் 85 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்தமான் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, அதிதீவிர புயலாகவே மாற வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், இது வங்காளதேசம் அல்லது ஆந்திரா பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆனால் தமிழகத்தை ஒட்டி வந்தால், மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் தற்போது கோடைமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்கிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும் (வியாழக்கிழமை) மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுதவிர தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளது. இது வரும் 15-ந்தேதி(நாளை) மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். அதன்பின்னர், 16-ந்தேதி (நாளை மறுதினம்) புயலாக வலுபெறக்கூடும்
இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வேகத்திலும், நாளை மறுதினம் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், 17-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) 65 கி.மீ. முதல் 85 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்தமான் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, அதிதீவிர புயலாகவே மாற வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், இது வங்காளதேசம் அல்லது ஆந்திரா பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆனால் தமிழகத்தை ஒட்டி வந்தால், மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X