என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு
Byமாலை மலர்13 May 2020 1:53 PM GMT (Updated: 13 May 2020 1:53 PM GMT)
படகில் திடீர் பழுது ஏற்பட்டதால் நடுக்கடலுக்குள் மூழ்க தொடங்கிய மீனவர்கள் 6 பேரை மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று மீட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 43). மீனவர். இவர் தனது நாட்டுப்படகில், அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் பிரசாத் (39), ஆரோக்கியம் (30), ஜேம்ஸ் (30), ஜெரால்டு (35), பிதேலி (35) ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் படகு கடலுக்குள் மூழ்க தொடங்கியது. படகில் இருந்த 6 மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டனர். மேலும், படகையும் கயிறு கட்டி திரேஸ்புரம் கரைக்கு இழுத்து வந்தனர். இதனால் 6 மீனவர்களும் பத்திரமாக கரைக்கு திரும்பினர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 43). மீனவர். இவர் தனது நாட்டுப்படகில், அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் பிரசாத் (39), ஆரோக்கியம் (30), ஜேம்ஸ் (30), ஜெரால்டு (35), பிதேலி (35) ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் படகு கடலுக்குள் மூழ்க தொடங்கியது. படகில் இருந்த 6 மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டனர். மேலும், படகையும் கயிறு கட்டி திரேஸ்புரம் கரைக்கு இழுத்து வந்தனர். இதனால் 6 மீனவர்களும் பத்திரமாக கரைக்கு திரும்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X