search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஆட்டோ கவிழ்ந்து எலக்ட்ரீசியன் பலி

    நெல்லை அருகே ஆட்டோ கவிழ்ந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    குடியாத்தம் பிச்சுவார் பேட்டையை சேர்ந்தவர் தணிகைமலை (வயது 34). இவர் நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஒரு ஆட்டோவில் எலக்ட்ரிக்கல் பொருட்களை வாங்குவதற்காக நெல்லை நோக்கி வந்தார். தச்சநல்லூர்- ஸ்ரீபுரம் இடையே உள்ள இணைப்பு சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த தணிகைமலையை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Next Story
    ×