என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியநாயக்கன்பாளையத்தில் வாலிபர் எரித்துக்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்12 May 2020 8:01 AM GMT (Updated: 12 May 2020 8:01 AM GMT)
பெரியநாயக்கன்பாளையத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ளது நாயக்கன்பாளையம். இங்குள்ள புதுப்பாலத்தின் கீழ் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிரிதீவ் ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அங்கு எரிந்த கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது.
உடல் கிடந்த அருகே அதிக ரத்தம் சிந்தியிருந்தது. இதனால் வாலிபர் தாக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்க எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்ட துப்பு துலங்கப்பட்டது.
வாலிபரை உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X