search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    பெரியநாயக்கன்பாளையத்தில் வாலிபர் எரித்துக்கொலை- போலீசார் விசாரணை

    பெரியநாயக்கன்பாளையத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ளது நாயக்கன்பாளையம். இங்குள்ள புதுப்பாலத்தின் கீழ் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிரிதீவ் ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அங்கு எரிந்த கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. 

    உடல் கிடந்த அருகே அதிக ரத்தம் சிந்தியிருந்தது. இதனால் வாலிபர் தாக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்க எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்ட துப்பு துலங்கப்பட்டது.

    வாலிபரை உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×