என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராவூரணி அருகே சென்னையில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்9 May 2020 11:04 AM GMT (Updated: 9 May 2020 11:04 AM GMT)
பேராவூரணி அருகே சென்னையில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பைங்கால் ஊராட்சி சாணாகரை கிராமத்தை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர் சென்னையில் குளிர்பான கடை நடத்திவந்துள்ளார். தற்போது சென்னையில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் தனது சொந்த ஊருக்கு கடந்த 6-ந்தேதி வந்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவரை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி சென்றனர்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் தஞ்சைக்கு அழைத்து சென்றனர். மேலும் சாணாகரை கிராமத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் வரை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வருவாய்த் துறையினரும், சுகாதாரத்துறையினரும் மற்றும் போலீசாரும் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் பழகியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாக பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பைங்கால் ஊராட்சி சாணாகரை கிராமத்தை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர் சென்னையில் குளிர்பான கடை நடத்திவந்துள்ளார். தற்போது சென்னையில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் தனது சொந்த ஊருக்கு கடந்த 6-ந்தேதி வந்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவரை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி சென்றனர்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் தஞ்சைக்கு அழைத்து சென்றனர். மேலும் சாணாகரை கிராமத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் வரை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வருவாய்த் துறையினரும், சுகாதாரத்துறையினரும் மற்றும் போலீசாரும் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் பழகியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாக பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X