search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட் பகுதி
    X
    கோயம்பேடு மார்க்கெட் பகுதி

    விழுப்புரத்தில் இன்று 69- கோயம்பேடு தொடர்பால் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

    கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    விழுப்புரம்:

    கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்டமாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொற்று பரவுகிறது. மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து சென்றவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது.

    செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 30 வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. காய்கறி வியாபாரிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணித்து, மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெரம்பலூரில் 106 ஆக உயர்ந்துள்ளது.

    திருவள்ளூரில் மேலும் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திருவள்ளூரில் 315 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×