என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் குடிபோதை தகராறில் வாலிபர் கொலை - நண்பர் கைது
Byமாலை மலர்8 May 2020 8:44 AM GMT
கோவை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
தேனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 20).
இவர் கோவை கணபதி அருகே உள்ள கே.ஆர்.ஜி. நகரில் வீடு வாடகைக்கு தங்கி இருந்து மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். இவருடன் புகலூர் அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்த மணிகண்டன் (23) என்ற கார் மெக்கானிக் தங்கி இருந்தார்.
சிவக்குமார் தனது சொந்த ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறொரு வாலிபருடன் திருமணம் நடந்தது. இதனால் சிவக்குமார் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார். மேலும் காதலியை நினைத்து கையில் பிளேட்டால் கிழித்து காயப்படுத்தி இருந்தார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த சிவக்குமார், மணிகண்டன் ஆகியோர் மது குடித்துகொண்டே பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மணிகண்டன் சிவக்குமாரின் காதலி குறித்து இழிவாகவும் சிவக்குமாரை கிண்டல் செய்தும் பேசியதாக தெரிகிறது.
இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிவக்குமார் மணிகண்டனிடம் நீ படுத்து தூங்கு காலைக்குள் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி உள்ளார்.
பின்னர் 2 பேரும் படுக்க சென்றனர். சிவக்குமார் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார்.
அவர் தன்னை கொலை செய்து விடுவான் என்ற பயத்தில் இருந்த மணிகண்டன் அதற்கு முன்பு சிவக்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த உடற்பயிற்சி செய்யும் எடை கல்லை எடுத்து தூங்கி கொண்டு இருந்த சிவக்குமாரின் தலையில் தாக்கினார். இதில் மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் மணிகண்டன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இன்று காலை சிவக்குமார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கொலை செய்து விட்டு தலைமறைவான மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 20).
இவர் கோவை கணபதி அருகே உள்ள கே.ஆர்.ஜி. நகரில் வீடு வாடகைக்கு தங்கி இருந்து மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். இவருடன் புகலூர் அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்த மணிகண்டன் (23) என்ற கார் மெக்கானிக் தங்கி இருந்தார்.
சிவக்குமார் தனது சொந்த ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறொரு வாலிபருடன் திருமணம் நடந்தது. இதனால் சிவக்குமார் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார். மேலும் காதலியை நினைத்து கையில் பிளேட்டால் கிழித்து காயப்படுத்தி இருந்தார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த சிவக்குமார், மணிகண்டன் ஆகியோர் மது குடித்துகொண்டே பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மணிகண்டன் சிவக்குமாரின் காதலி குறித்து இழிவாகவும் சிவக்குமாரை கிண்டல் செய்தும் பேசியதாக தெரிகிறது.
இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிவக்குமார் மணிகண்டனிடம் நீ படுத்து தூங்கு காலைக்குள் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி உள்ளார்.
பின்னர் 2 பேரும் படுக்க சென்றனர். சிவக்குமார் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார்.
அவர் தன்னை கொலை செய்து விடுவான் என்ற பயத்தில் இருந்த மணிகண்டன் அதற்கு முன்பு சிவக்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த உடற்பயிற்சி செய்யும் எடை கல்லை எடுத்து தூங்கி கொண்டு இருந்த சிவக்குமாரின் தலையில் தாக்கினார். இதில் மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் மணிகண்டன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இன்று காலை சிவக்குமார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கொலை செய்து விட்டு தலைமறைவான மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X